×

கிருஷ்ணகிரி அருகே ஊஞ்சல் கயிறு இறுக்கி, சிறுவன் பலி!

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஊஞ்சல் ஆடியபோது கயிறு இறுக்கி 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள வெங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). கூலி தொழிலாளி. இவரது மனைவி அமராவதி (30). இவர்களுக்கு சிரஞ்சித்(13), புவனேஷ் என்ற 2 மகன்களும், ஜோதி, யுவஶ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், தம்பதியினர் இருவரும் நேற்று காலை கூலி வேலைக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் குழந்தைகள் அனைவரும்
 

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஊஞ்சல் ஆடியபோது கயிறு இறுக்கி 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள வெங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). கூலி தொழிலாளி. இவரது மனைவி அமராவதி (30). இவர்களுக்கு சிரஞ்சித்(13), புவனேஷ் என்ற 2 மகன்களும், ஜோதி, யுவஶ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், தம்பதியினர் இருவரும் நேற்று காலை கூலி வேலைக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் குழந்தைகள் அனைவரும் வீட்டின் அருகேயுள்ள மாட்டு கொட்டகையில் கயிற்றில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக சிரஞ்சித் (13) கழுத்தை ஊஞ்சல் கயிறு இறுக்கியது. இதில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்து குழந்தைகள் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சிரஞ்சித்தை மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிரஞ்சித்தை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த பர்கூர் போலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஊஞ்சல் கயிறு இறுக்கி சிறுவன் பலியான சம்பவம் வெங்கடபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.