×

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், புதுமாப்பிள்ளை பலி!

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், திருமணமாகி ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த கங்கசந்திரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (26). இவருக்கு கடந்த ஒரு மாதம் முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், விஷ்ணு நேற்றிரவு கிருஷ்ணகிரியில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் கங்கசந்திரம் பகுதியை சேர்ந்த ஶ்ரீதர் (25), லோகேஷ்(25) ஆகியோரும் உடன் சென்றனர். இந்த நிலையில், குருபரப்பள்ளி
 

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், திருமணமாகி ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த கங்கசந்திரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (26). இவருக்கு கடந்த ஒரு மாதம் முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், விஷ்ணு நேற்றிரவு கிருஷ்ணகிரியில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அவருடன் கங்கசந்திரம் பகுதியை சேர்ந்த ஶ்ரீதர் (25), லோகேஷ்(25) ஆகியோரும் உடன் சென்றனர். இந்த நிலையில், குருபரப்பள்ளி அடுத்த மார்க்கண்டேய நதியின் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த கார் ஓன்று அதிவேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஶ்ரீதர் மற்றும் லோகேஷ் ஆகியார் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.