×

கல்குவாரி குட்டையில் மூழ்கி ஐ.டி.ஐ மாணவர் பலி!

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி ஐ.டி.ஐ மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள பெரிய செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பலராமன் (18). இவர் பர்கூரில் உள்ள ஐடிஐயில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பலராமன் தனது நண்பர்களுடன், செந்தாரப்பள்ளியில் உள்ள அரசு கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றார். தண்ணீரில் இறங்கி குளத்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிய அவர்,
 

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி ஐ.டி.ஐ மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள பெரிய செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பலராமன் (18). இவர் பர்கூரில் உள்ள ஐடிஐயில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பலராமன் தனது நண்பர்களுடன், செந்தாரப்பள்ளியில் உள்ள அரசு கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றார்.

தண்ணீரில் இறங்கி குளத்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிய அவர், நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், அந்த பகுதி இளைஞர்களுடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவாகியதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, நேற்று காலை முதல் பர்கூர் தீணையப்பு நிலைய வீரர்கள் குட்டையில் தேடுதல் பணியில் ஈடுட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அவர்கள் பலராமனின் சடலத்தை மீட்டனர். தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார், உடலை பிரே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.