×

கிருஷ்ணகிரி அருகே கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை!

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அருகே கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள கள்ளியூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தமிழரசன் (25). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில, தமிழரசன் குடும்ப செலவிற்காக பலரிடமும் கடன் பெற்றுள்ளார். ஆனால் பணத்திற்கு வட்டியை சரிவர செலுத்தாமல் என கூறப்படுகிறது. இதனால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை
 

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள கள்ளியூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தமிழரசன் (25). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில, தமிழரசன் குடும்ப செலவிற்காக பலரிடமும் கடன் பெற்றுள்ளார். ஆனால் பணத்திற்கு வட்டியை சரிவர செலுத்தாமல் என கூறப்படுகிறது.

இதனால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை அளித்து வந்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட தமிழரன், நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.