×

ஓசூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல் – தம்பதி பலி!

கிருஷ்ணகிரி ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெரியார் நகரை சேர்ந்தவர் முரளி(40). இவரது மனைவி ராணி (35). இவர்கள் நேற்று சாமல்பள்ளம் முனியப்பன் கோவிலுக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். கோபசந்திரம் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது முரளி வாகனத்தின் மீது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கார் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட
 

கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெரியார் நகரை சேர்ந்தவர் முரளி(40). இவரது மனைவி ராணி (35). இவர்கள் நேற்று சாமல்பள்ளம் முனியப்பன் கோவிலுக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். கோபசந்திரம் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது முரளி வாகனத்தின் மீது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கார் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது.

இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட முரளி, அவரது மனைவி ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் வந்த மூதாட்டி ஒருவரும் காயமடைந்தார். தகவலின் பேரில் சூளகிரி போலீசார், விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், காயமடைந்த மூதாட்டியை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.