×

வயலில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த, 7 வயது சிறுவன் பலி!

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அருகே மழையால் அறுந்து விழுந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததால் 7 வயது சிறுவன் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் கவேரிபட்டினம் அடுத்த தளிஅள்ளி ஊராட்சி கோவிலூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது 7 வயது மகன் முகிலன். இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் 2அம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், காவேரிபட்டினம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பெய்த கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. இதேபோல், கோவிலூர் பகுதியில் உள்ள விவசாய
 

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே மழையால் அறுந்து விழுந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததால் 7 வயது சிறுவன் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கவேரிபட்டினம் அடுத்த தளிஅள்ளி ஊராட்சி கோவிலூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது 7 வயது மகன் முகிலன். இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் 2அம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், காவேரிபட்டினம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பெய்த கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன.

இதேபோல், கோவிலூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. இந்த நிலையில், நேற்று வயலுக்கு சென்ற சிறுவன் முகிலன், எதிர்பாராத மின்கம்பியை மிதித்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து, அனுப்பிவைத்தனர்.