×

கொடிமுடியில் விடிய விடிய பெய்த கனமழை; வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர்

ஈரோடு ஈரோடு மாவட்டம் கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், கொடுமுடியில் இதுவரை இல்லாத அளவாக 34 சென்டி மீட்டர் மழை பதிவாகியது. இந்த கனமழையின் காரணமாக கொடுமுடி வடக்கு தெரு, நுழைவு பாலம் உள்பட 17-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளம்
 

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், கொடுமுடியில் இதுவரை இல்லாத அளவாக 34 சென்டி மீட்டர் மழை பதிவாகியது. இந்த கனமழையின் காரணமாக கொடுமுடி வடக்கு தெரு, நுழைவு பாலம் உள்பட 17-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

மேலும், தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. முன்னெச்சரிகை நடவடிக்கையாக வருவாய் துறையினர் அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.