×

கரூரில் விபத்தில் காயமடைந்த தொழிலாளி, தூக்கிட்டு தற்கொலை!

கரூர் கரூரில் விபத்தில் காயமடைந்த தொழிலாளி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாநகரட்சிக்குட்பட்ட வெங்கமேடு இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (54). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் மணிவண்ணன் படுகாயம் அடைந்தார். இதனால் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். விபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்ட மணிவண்ணன், நேற்று வீட்டில் தனியாக
 

கரூர்

கரூரில் விபத்தில் காயமடைந்த தொழிலாளி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாநகரட்சிக்குட்பட்ட வெங்கமேடு இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (54). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் மணிவண்ணன் படுகாயம் அடைந்தார்.

இதனால் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். விபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்ட மணிவண்ணன், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து, ஜெயலட்சுமி அளித்த தகவலின் பேரில் வெங்கமேடு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொணடு வருகின்றனர்.