×

செலவுக்கு பணம் தர மறுத்ததால் ஆத்தரம்… முன்னாள் வட்டாட்சியரை கழுத்தை நெரித்துக்கொன்ற உறவினர்!

கன்னியாகுமரி நாகர்கோவில் அருகே செலவுக்கு பணம் தர மறுத்த முன்னாள் வட்டாட்சியரை கழுத்தை நெரிந்து கொன்ற, உறவினரை போலீசார் கைதுசெய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கணேசபுரத்தில் வசித்து வருபவர் சிவதாணு. ஓய்வுபெற்ற வட்டாட்சியர். இவர் தங்கை மகனான விக்னேஸ்வர ராம் என்பவரை தனது வீட்டில் வைத்து பாராமரித்து வந்ததார். விக்னேஸ்வர ராமுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை விக்னேஸ்வரராம், கை செலவிற்கு பணம் கேட்டு சிவதாணுவை தொந்தரவு செய்ததாக
 

கன்னியாகுமரி

நாகர்கோவில் அருகே செலவுக்கு பணம் தர மறுத்த முன்னாள் வட்டாட்சியரை கழுத்தை நெரிந்து கொன்ற, உறவினரை போலீசார் கைதுசெய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கணேசபுரத்தில் வசித்து வருபவர் சிவதாணு. ஓய்வுபெற்ற வட்டாட்சியர். இவர் தங்கை மகனான விக்னேஸ்வர ராம் என்பவரை தனது வீட்டில் வைத்து பாராமரித்து வந்ததார். விக்னேஸ்வர ராமுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை விக்னேஸ்வரராம், கை செலவிற்கு பணம் கேட்டு சிவதாணுவை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிவதாணு பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வர ராம் சிவதாணுவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மரருத்துமவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொலையாளி விக்னேஸ்வர ராமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.