×

கன்னியாகுமரி: ஓட்டல் உரிமையாளரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை

நாகர்கோயில் அருகே பிரபல ஓட்டல் உரிமையாளரின் கார் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ட்ரிஸில் பிரஸ்டோ என்ற பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலின் உரிமையாளர் கார்த்திக், நேற்று இரவு தனது விலை உயர்ந்த காரில் ஓட்டலுக்கு வந்துள்ளார். பின்னர் ஓட்டல் வாசலில் காரை நிறுத்திவிட்டு அவர் உள்ளே சென்ற நிலையில்,
 

நாகர்கோயில் அருகே பிரபல ஓட்டல் உரிமையாளரின் கார் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ட்ரிஸில் பிரஸ்டோ என்ற பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலின் உரிமையாளர் கார்த்திக், நேற்று இரவு தனது விலை உயர்ந்த காரில் ஓட்டலுக்கு வந்துள்ளார்.

பின்னர் ஓட்டல் வாசலில் காரை நிறுத்திவிட்டு அவர் உள்ளே சென்ற நிலையில், மர்மநபர்கள் அவரது காரின் கண்ணாடியை உடைத்து 3 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து கார்த்தி அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.