×

கன்னியாகுமரி: மின் ஊழியர் திடீர் மாயம் – பேச்சிப்பாறை போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (40). பாபநாசம் அருகேயுள்ள காரையாறு பகுதியில் மின் ஊழியராக பணியாற்றி வந்த இவர், கடந்த வாரம் குமரி மாவட்டம் கோதையாறு மின் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.இதனைத் தொடர்ந்து கோதையாறு மின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த லட்சுமணன், நேற்று முன்தினம், காரையார் குடியிருப்பில் உள்ள தனது உடைமைகளை எடுத்து வருவதாக கூறிவிட்டு
 

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (40). பாபநாசம் அருகேயுள்ள காரையாறு பகுதியில் மின் ஊழியராக பணியாற்றி வந்த இவர், கடந்த வாரம் குமரி மாவட்டம் கோதையாறு மின் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இதனைத் தொடர்ந்து கோதையாறு மின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த லட்சுமணன், நேற்று முன்தினம், காரையார் குடியிருப்பில் உள்ள தனது உடைமைகளை எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பாத நிலையில், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரது மனைவி முத்துலட்சுமி பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பேச்சிபாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை தேடி வருகின்றனர்.