மீன் வலையில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு!
கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மீன்பிடி வலையில் சிக்கிய 12 நீள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.திருவட்டார் சப்பாத்து பகுதியில் உள்ள பரளியாற்றில், அப்பகுதி இளைஞர்கள் மீன்பிடிப்பதற்காக வலை விரித்துள்ளனர். இந்நிலையில் ஆற்றில் குளிக்க சென்றவர் வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியிருப்பதை பார்த்து உடனடியாக வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் வலையில் இருந்த 12 அடி நீளமுடைய மலைப்பாம்பை மீட்டனர். பின்னர், அந்த மலைப்பாம்பு காட்டுபகுதியில்
Oct 23, 2020, 22:59 IST
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மீன்பிடி வலையில் சிக்கிய 12 நீள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.
திருவட்டார் சப்பாத்து பகுதியில் உள்ள பரளியாற்றில், அப்பகுதி இளைஞர்கள் மீன்பிடிப்பதற்காக வலை விரித்துள்ளனர். இந்நிலையில் ஆற்றில் குளிக்க சென்றவர் வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியிருப்பதை பார்த்து உடனடியாக வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் வலையில் இருந்த 12 அடி நீளமுடைய மலைப்பாம்பை மீட்டனர். பின்னர், அந்த மலைப்பாம்பு காட்டுபகுதியில் கொண்டுவிடப்பட்டது.