×

காஞ்சிபுரம் அருகே உரிய ஆவணமில்லாத ரூ.1.62 லட்சம் பறிமுதல்!

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற 1 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ் கதிர்பூர் புறவழிச்சாலையில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டனர்.
 

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற 1 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ் கதிர்பூர் புறவழிச்சாலையில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். இந்த சோதனையில், வாகனத்தில் சுமார் 1 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, வாகனஓட்டியிடம் விசாரித்த போது, அவரிடம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.

இதனை அடுத்து, அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அதனை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.