×

மதுராந்தகம் அருகே வாகனத்தில் கடத்தமுயன்ற ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல்

செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே விற்பனை செய்வதற்காக வாகனத்தில் கடத்திவரப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள எல்.எண்டத்தூர் கிராமத்தில் நேற்றிரவு பான்பராக் உள்ளிட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக, உத்திரமேரூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு குட்கா பொருட்களை மர்மநபர்கள் மாற்றிக்கொண்டிருந்தது
 

செங்கல்பட்டு

மதுராந்தகம் அருகே விற்பனை செய்வதற்காக வாகனத்தில் கடத்திவரப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள எல்.எண்டத்தூர் கிராமத்தில் நேற்றிரவு பான்பராக் உள்ளிட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக, உத்திரமேரூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு குட்கா பொருட்களை மர்மநபர்கள் மாற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசார் வருவதை கண்டவுடன் அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதனையடுத்து வாகனத்தில் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.