×

வீடு புகுந்து மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை…

காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகே இரவில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த தோட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜன்(52). இவரது தாயார் பேபி அம்மாள்(75). நேற்று முன்தினம் இரவு கோவிந்தராஜ், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் உள்ள அறையில் படுத்து உறங்கினார். பேபி அம்மாள் அறையின் வெளி பகுதியில் படுத்து இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள்
 

காஞ்சிபுரம்

உத்திரமேரூர் அருகே இரவில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த தோட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜன்(52). இவரது தாயார் பேபி அம்மாள்(75). நேற்று முன்தினம் இரவு கோவிந்தராஜ், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் உள்ள அறையில் படுத்து உறங்கினார். பேபி அம்மாள் அறையின் வெளி பகுதியில் படுத்து இருந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பேபி அம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தமிட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். அதற்குள்ளாக கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.

கொள்ளை சம்பவம் குறித்து கோவிந்தராஜ, சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.