×

ரயில்வே ஊழியர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை; காஞ்சிபுரம் எஸ்.பி., நேரில் விசாரணை!

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அருகே ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். காஞ்சிபுரம் அடுத்த சித்தேரிமேடு பகுதியை சேர்ந்தவர் துரையரசன் (37). இவர் ரயில்வேயில் சிக்னல் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, துரையரசன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில், நள்ளிரவில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 60 சவரன் தங்க நகைகளை
 

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த சித்தேரிமேடு பகுதியை சேர்ந்தவர் துரையரசன் (37). இவர் ரயில்வேயில் சிக்னல் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, துரையரசன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

இந்த நிலையில், நள்ளிரவில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 60 சவரன் தங்க நகைகளை திருடி சென்றனர். காலையில் எழுந்து பார்த்தபோது, நகைகள் கொள்ளை போனதை அறிந்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, துரையரசன் பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில், காஞ்சிபுரம் எஸ்.பி சண்முக பிரியா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து, கொள்ளையர்களின் தடயங்களும் சேகரிக்கப்பட்டது.

இதுகுறித்து புகாரின் பேரில் பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.