×

300 சவரன் நகை வழிப்பறி – 2 காவலர்கள் உள்பட 7 பேர் கைது

காஞ்சிபுரம் ஶ்ரீபெரும்புதூர் அருகே நகைக்கடை உரிமையாளரிடம் 300 சவரன் நகைகள் கொள்ளையடித்த வழக்கில் காவலர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைதுசெய்தனர். திருவள்ளூரை சேர்ந்தவர் நகைக்கடை உரிமையாளர் மகேந்திரன்(52). இவர் கடந்த 17ஆம் தேதி காஞ்புரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூருக்கு ஆட்டோவில் சென்றபோது, மர்மநபர்கள் கத்திமுனையில் 300 சவரன் தங்க நகையை பறித்துச்சென்றனர். இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக, ஶ்ரீபெருமபுதூர் ஏஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் மானாமதி
 

காஞ்சிபுரம்

ஶ்ரீபெரும்புதூர் அருகே நகைக்கடை உரிமையாளரிடம் 300 சவரன் நகைகள் கொள்ளையடித்த வழக்கில் காவலர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைதுசெய்தனர். திருவள்ளூரை சேர்ந்தவர் நகைக்கடை உரிமையாளர் மகேந்திரன்(52). இவர் கடந்த 17ஆம் தேதி காஞ்புரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூருக்கு ஆட்டோவில் சென்றபோது, மர்மநபர்கள் கத்திமுனையில் 300 சவரன் தங்க நகையை பறித்துச்சென்றனர்.

இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக, ஶ்ரீபெருமபுதூர் ஏஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் மானாமதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் தமிழ் மற்றும் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர் கதிர் உள்ளிட்ட 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, காவலர்கள் கதிர், தமிழ் உள்ளிட்ட 7 பேரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 350 கிராம் தங்கம் மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.