×

ஸ்டவ் வெடித்து படுகாயம் அடைந்த பெண் உயிரிழப்பு

ஈரோட்டில் மண்ணெண்ணை ஸ்டவ் வெடித்ததில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரோடு திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன்ரோடு பகுதியை சேர்ந்தவர் சுமைதூக்கும் தொழிலாளி பெரியசாமி(40). இவரது மனைவி மாரியம்மாள்(35), கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மாரியம்மாள் கடந்த 4ஆம் தேதி இரவு சாப்பாடு செய்வதற்காக வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, எதிர்பாரதவிதமாக ஸ்டவ் வெடித்ததில், மாரியம்மாளின் உடலில் தீப்பற்றி எரிந்தது. இதில் 80
 

ஈரோட்டில் மண்ணெண்ணை ஸ்டவ் வெடித்ததில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரோடு திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன்ரோடு பகுதியை சேர்ந்தவர் சுமைதூக்கும் தொழிலாளி பெரியசாமி(40). இவரது மனைவி மாரியம்மாள்(35), கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

rep image

இந்நிலையில் மாரியம்மாள் கடந்த 4ஆம் தேதி இரவு சாப்பாடு செய்வதற்காக வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, எதிர்பாரதவிதமாக ஸ்டவ் வெடித்ததில், மாரியம்மாளின் உடலில் தீப்பற்றி எரிந்தது. இதில் 80 சதவீதம் தீக்காயம் அடைந்த மாரியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாரியம்மாளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.