×

சத்தியமங்கலத்தில் உரிய ஆவணமில்லாத ரூ.1 லட்சம் பறிமுதல்!

ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஆட்டு வியாபாரியிடம் உரிய ஆவணங்கள் இல்லாத 1 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, வாகனத்தில் 1 லட்சம் ரூபாய் பணம் எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வாகனத்தில் வந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த
 

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே ஆட்டு வியாபாரியிடம் உரிய ஆவணங்கள் இல்லாத 1 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, வாகனத்தில் 1 லட்சம் ரூபாய் பணம் எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வாகனத்தில் வந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த சுப்ரமணியம் என்றும், ஆடு விற்பனை செய்துவிட்டு பணத்தை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

ஆனால், பணத்திற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், அதனை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பறிமுதலான பணம், சத்தியமங்கலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான உமாசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.