×

ஈரோடு திருவேங்கடசாமி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகரம் முழுவதும் அகற்ற முடிவு

ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாலையோரங்களில் வணிக நிறுவனங்களால் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளையும் அதிகாரிகள் அவ்வப்போது அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள வணிக நிறுவனங்களால் சாலையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இதில் சாலையோரம் இருந்த விளம்பர தட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் மரக்கட்டைகள் போன்றவற்றை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். சில கடைக்காரர்கள்
 

ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாலையோரங்களில் வணிக நிறுவனங்களால் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளையும் அதிகாரிகள் அவ்வப்போது அகற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள வணிக நிறுவனங்களால் சாலையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இதில் சாலையோரம் இருந்த விளம்பர தட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் மரக்கட்டைகள் போன்றவற்றை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.

சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது பொருட்களை எடுத்துச் சென்றனர்.

திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதுபோல் மாநகரம் முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.