×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த மழையின் காரணமாக, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 997 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், இன்று காலை 9 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 99.99 அடியாக உள்ளது. பவானிசாகர் அணியிலிருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்காக நேற்று இரவு முதல் மீண்டும் வினாடிக்கு 650 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி பாசனத்திற்காக தொடர்ந்து
 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த மழையின் காரணமாக, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 997 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், இன்று காலை 9 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 99.99 அடியாக உள்ளது. பவானிசாகர் அணியிலிருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்காக நேற்று இரவு முதல் மீண்டும் வினாடிக்கு 650 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி பாசனத்திற்காக தொடர்ந்து 2 ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.