×

மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய விளை நிலங்களின் ஆதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 99. 78 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 6,871 கன அடி தண்ணீர் வந்து
 

ஈரோடு திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய விளை நிலங்களின் ஆதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 99. 78 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 6,871 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 450 கனஅடியும் கீழ் பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடி என மொத்தம் 2,750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று ஈரோடு குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக 18 மில்லி மீட்டர் மழை பதிவானது. பவானிசாகர் பகுதியில் 9.8 கோபி 3, பவானி 1.4 போன்ற இடங்களில் மிதமான மழை பெய்தது.