×

காதல் கணவரை கடத்திவிட்டனர் – எஸ்.பி. அலுவலகத்தில் இளம்பெண் புகார்!

ஈரோடு காதலித்து திருமணம் செய்த கணவரை, அவரது பெற்றோர் கடத்திச் சென்றுள்ளதாக ஈரோடு காவல்துறை அலுவலகத்தில் இளம்பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டம் வெள்ளியம்பாளையம் செல்வ நகர் காலனியை சேர்ந்தவர் காயத்ரி. இவர் அளித்துள்ள புகாரில், கூறி இருப்பதாவது,கடந்த 2015ஆம் ஆண்டு கொடுமுடியில், ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்த போது, புதூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து கடந்த 21.4.2016 -ல் கரூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். இருவரும் வெவ்வேறு
 

ஈரோடு

காதலித்து திருமணம் செய்த கணவரை, அவரது பெற்றோர் கடத்திச் சென்றுள்ளதாக ஈரோடு காவல்துறை அலுவலகத்தில் இளம்பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டம் வெள்ளியம்பாளையம் செல்வ நகர் காலனியை சேர்ந்தவர் காயத்ரி. இவர் அளித்துள்ள புகாரில், கூறி இருப்பதாவது,
கடந்த 2015ஆம் ஆண்டு கொடுமுடியில், ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்த போது, புதூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து கடந்த 21.4.2016 -ல் கரூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டேன்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், நான் எனது கணவருடன் கொடுமுடி அருகே உள்ள குந்தாணி பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். எங்களுக்கு மூன்று வயதில் நித்யஸ்ரீ என்ற மகள் உள்ளார். சதீஷ்குமார் பெற்றோர்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கொடுமுடி பேருந்து நிலையத்திற்கு வரச்சொல்லி எங்களையும் குழந்தைகளும் பார்த்து செல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனக்கும், கணவருக்கும் சண்டை வந்ததா, நான் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்தேன். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் 3 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றேன். அப்போது, என்னையும் குழந்தையையும் தவிக்க விட்டு எனது கணவர் அவரது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

இது குறித்து, காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் , கடந்த 20 ஆம் தேதி இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எனது கணவர் வேறு வீடு பார்த்து அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அதன் பின்னர் கடந்த 22ஆம் தேதி நான் எனது உறவினர் களுடன் சதீஷ் வீட்டிற்கு சென்றபோது அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் எனது ஜாதியை சொல்லி கேவலமாக பேசி மிரட்டினார்கள்.

மீறி வந்தால் உன்னையும் குழந்தையையும் கொன்று விடுவோம் என்று மிரட்டிய நிலையில், கடந்த ஒரு வாரமாக எனது கணவர் சதீஷ்குமாரை காணவில்லை. அவருடைய செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. கலப்பு திருமணம் செய்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தையுடன் இருக்கும் என்க்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும், உடனடியாக எனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.