×

சாலையோரம் உறங்கிய 2 வயது ஆண் குழந்தை கடத்தல் – போலீசார் விசாரணை

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் சாலையோரம் உறங்கிய நரிக்குறவர் தம்பதியின் 2 வயது ஆண் குழந்தையை மர்மநபர்கள் கடத்திச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் நரிகுறவர் சமூகத்தை சேர்ந்த அம்மாசை. இவருக்கு திலகவதி என்ற மனைவியும், 2 வயது ஆண் குழந்தை கில்லி உட்பட 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் கோபி பேருந்து நிலையத்தின் முன்புறம் உள்ள கீரிப்பள்ளம் ஓடையின் உயர்மட்ட பாலத்தில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு, 3
 

ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையத்தில் சாலையோரம் உறங்கிய நரிக்குறவர் தம்பதியின் 2 வயது ஆண் குழந்தையை மர்மநபர்கள் கடத்திச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் நரிகுறவர் சமூகத்தை சேர்ந்த அம்மாசை. இவருக்கு திலகவதி என்ற மனைவியும், 2 வயது ஆண் குழந்தை கில்லி உட்பட 3 குழந்தைகளும் உள்ளனர்.

இவர்கள் கோபி பேருந்து நிலையத்தின் முன்புறம் உள்ள கீரிப்பள்ளம் ஓடையின் உயர்மட்ட பாலத்தில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு, 3 குழந்தைகளையும் நடைபாதையில் தூங்கவைத்துவிட்டு, அம்மாசை மற்றும் திலகவதி அருகே உள்ள கடைக்கு சாப்பாடு வங்க சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை கில்லி மாயமானதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர், இரவு முழுவதும் பல்வேறு இங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனையடுத்து, இன்று காலை கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.