×

அந்தியூர் அருகே வனக் காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை!

ஈரோடு அந்தியூர் அருகே வனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(28). இவர் ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்தில் வனக் காப்பாளராக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று அந்தியூர் வனத்துறை ஊழியர்கள், அந்த பகுதியில் உள்ள கொம்பூதி அம்மன் கோயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோயிலின் அருகே பிரபாகரன் விஷம் குடித்து உயிரிழந்த நிலையில், சடலமாக
 

ஈரோடு

அந்தியூர் அருகே வனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(28). இவர் ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்தில் வனக் காப்பாளராக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று அந்தியூர் வனத்துறை ஊழியர்கள், அந்த பகுதியில் உள்ள கொம்பூதி அம்மன் கோயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கோயிலின் அருகே பிரபாகரன் விஷம் குடித்து உயிரிழந்த நிலையில், சடலமாக கிடந்தார். இது குறித்து வனத்துறையினர், பர்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வனக்காப்பாளர் மரணம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.