×

கஞ்சா வழக்கில் ஈரோட்டு வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

ஈரோட்டில் கஞ்சா வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் வாலிபர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் என்கிற ஆனந்த்குமார் (வயது 35). இவர் மீது கஞ்சா, வழிப்பறி என 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. தற்போது ஒரு வழக்கிற்காக ஆனந்த்குமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வருவதால் ஆனந்த் குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட
 

ஈரோட்டில் கஞ்சா வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் வாலிபர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது

ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் என்கிற ஆனந்த்குமார் (வயது 35). இவர் மீது கஞ்சா, வழிப்பறி என 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. தற்போது ஒரு வழக்கிற்காக ஆனந்த்குமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Rep Image

இந்நிலையில் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வருவதால் ஆனந்த் குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஈரோடு கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் உத்தரவின் பேரில் ஆனந்த் குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.