×

சொத்துக்களை எழுதி தரக்கோரி மிரட்டல்; எஸ்.பி-யிடம் முதியவர் புகார்

ஈரோடு ஈரோட்டில் சொத்துக்களை எழுதி தரக்கோரி கொலைவெறி தாக்குதல் நடத்திய உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதியவர் ஒருவர், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். ஈரோடு சூளை முதலிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் சொந்தமாக மெஷினரி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேரிபாரதி, கடந்த அக்டோபர் மாதம் உயிரிழந்த நிலையில். தனிமையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், ஜெயப்பிரகாஷுக்கு சொந்தமான 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை எழுதி தரக்கோரி, அவரது மகள்
 

ஈரோடு

ஈரோட்டில் சொத்துக்களை எழுதி தரக்கோரி கொலைவெறி தாக்குதல் நடத்திய உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதியவர் ஒருவர், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். ஈரோடு சூளை முதலிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் சொந்தமாக மெஷினரி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேரிபாரதி, கடந்த அக்டோபர் மாதம் உயிரிழந்த நிலையில். தனிமையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், ஜெயப்பிரகாஷுக்கு சொந்தமான 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை எழுதி தரக்கோரி, அவரது மகள் மோனிகா மற்றும் மருமகன் ரெய்மண்ட்ராஜ் ஆகியோர் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஜெயப்பிரகாஷ் மீது அவர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதுடன், தொடர்ந்து கொலை மிட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மனவேதனை அடைந்த ஜெயப்பிரகாஷ், தனக்கு பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையை சந்தித்து மனு வழங்கினார். மேலும், கொலை மிரட்டல் விடுத்த மகள் மற்றும் மருமகன் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் கேட்டுக்கொண்டார். மனுவை பெற்றுகொண்ட எஸ்.பி. தங்கதுரை, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர் திரும்பிச்சென்றார்.