×

சிலைத் திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் கைது- ஐம்பொன் சிலை பறிமுதல்

ஈரோடு ஈரோட்டில் சிலைத்திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை அதிரடியாக கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து ஐம்பொன் சிலையை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரம் வீதியில் பிரசித்திபெற்ற வெற்றி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன சுமார் ஒரு அடி உயரமுள்ள உற்சவர் சிலை கடந்த ஆகஸ்ட் மாதம் திருடுபோனது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், மோளபாளையம்
 

ஈரோடு

ஈரோட்டில் சிலைத்திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை அதிரடியாக கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து ஐம்பொன் சிலையை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரம் வீதியில் பிரசித்திபெற்ற வெற்றி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன சுமார் ஒரு அடி உயரமுள்ள உற்சவர் சிலை கடந்த ஆகஸ்ட் மாதம் திருடுபோனது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், மோளபாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், நாடார்மேடு பகுதியில் உள்ள வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து தலைமறைவாக இருந்த வெங்கடேஷை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், ஈரோட்டில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த வெங்கடேஷை ரகசிய தகவலின் பேரில் கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து ஐம்பொன் சிலையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.