×

கிராமங்களில் நாடகம் நடத்த அனுமதி கோரி, ஈரோடு நாடக கலைஞர்கள் மனு

ஈரோடு கிராமப் புறங்களில் மேடை நாடகங்கள் நடத்த அனுமதி கோரி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் நாடக கலைஞர்கள் கோரிக்கை மனு வழங்கினர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது, தமிழ்நாடு நாடகம் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கம் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை வழங்கினர். அந்த மனுவில், தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மேடை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்காததால், அதனை நம்பியுள்ள நாடக நடிகர்கள், ஒப்பனையாளர் இசையமைப்பாளர்கள்
 

ஈரோடு

கிராமப் புறங்களில் மேடை நாடகங்கள் நடத்த அனுமதி கோரி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் நாடக கலைஞர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது, தமிழ்நாடு நாடகம் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கம் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை வழங்கினர்.

அந்த மனுவில், தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மேடை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்காததால், அதனை நம்பியுள்ள நாடக நடிகர்கள், ஒப்பனையாளர் இசையமைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கான கலைஞர்கள் வறுமையில் வாடுவதாக தெரிவித்து இருந்தனர்.

தங்களை போன்ற கலைஞர்களுக்கு வேறு தொழில் தெரியாததால் பல்வேறு இன்னல்கள் அணிவித்து வருவதாகவும், சிலர் கடன் சுமை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் ஜனவரி முதல் பொது நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்ட நிலையில், கிராமப்புறங்களில் நாடகம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த போலீசார் அனுமதி வழங்க மறுப்பதாக தெரிவத்துள்னர்.

கடந்த 10 மாத காலமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அவர்கள் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.