×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு

ஈரோடு நீலகிரி மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முதல் மழைப்பொழிவு குறைந்ததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 98.72 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 544 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்காக திறந்து விடும் தண்ணீர் அளவு 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து 2,300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை காட்டிலும்
 

ஈரோடு

நீலகிரி மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முதல் மழைப்பொழிவு குறைந்ததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 98.72 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 544 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை

பாசனத்திற்காக திறந்து விடும் தண்ணீர் அளவு 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து 2,300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகரித்துக் உள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இதனிடையே, நேற்று ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி, தாளவாடி, வரட்டுப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 12.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.