மனைவி பிரிந்துசென்ற வேதனையில் கட்டிட தொழிலாளி தற்கொலை
ஈரோடு ஈரோட்டில் மனைவி பிரிந்த சென்ற வேதனையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் செட்டியார் வீதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பூபதி(45). இவருக்கு முத்தமிழ் செல்வி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக முத்தமிழ்செல்வி கடந்த ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றுள்ளார். இதனால், தனியாக வசித்து வந்த பூபதி, மனைவி பிரிந்து சென்ற வேதனையில் நேற்று
Nov 2, 2020, 10:39 IST
ஈரோடு
ஈரோட்டில் மனைவி பிரிந்த சென்ற வேதனையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் செட்டியார் வீதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பூபதி(45). இவருக்கு முத்தமிழ் செல்வி என்ற மனைவியும், ஒரு
மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக முத்தமிழ்செல்வி கடந்த ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றுள்ளார். இதனால், தனியாக வசித்து வந்த பூபதி, மனைவி பிரிந்து சென்ற வேதனையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.