×

கொடிவேரி அணையில் மூழ்கி மருந்து நிறுவன ஊழியர் பலி!

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த கொடிவேரி அணையில் குளித்த மருந்து நிறுவன ஊழியர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சபரிநாதன்(27). இவர் சென்னையில் உள்ள மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், சபரிநாதனின் திருமணத்திற்காக சென்னையில் உடன் பணிபுரிந்த நண்பர்கள் ஈரோட்டுக்கு வந்திருந்தனர். திருமணம் முடிந்த நிலையில் நண்பர்கள் அனைவரும் கொடிவேரி அணை பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது, சென்னை தரமணியை சேர்ந்த ஜெயக்குமார்(25) என்பவர் திடீரென நீரில்
 

ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த கொடிவேரி அணையில் குளித்த மருந்து நிறுவன ஊழியர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சபரிநாதன்(27). இவர் சென்னையில் உள்ள மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், சபரிநாதனின் திருமணத்திற்காக சென்னையில் உடன் பணிபுரிந்த நண்பர்கள் ஈரோட்டுக்கு வந்திருந்தனர்.

திருமணம் முடிந்த நிலையில் நண்பர்கள் அனைவரும் கொடிவேரி அணை பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது, சென்னை தரமணியை சேர்ந்த ஜெயக்குமார்(25) என்பவர் திடீரென நீரில் மூழ்கி மாயமாகினார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், உடடினயாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஜெயக்குமார் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். தொடர்ந்து பங்களாபுதூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.