கொரோனா விதிமீறல் – 2 மாதத்தில் 6,500 பேருக்கு அபராதம் விதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த 2 மாதங்களில் 6 ஆயிரத்து 500 பேருக்கு அபராதம் விதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில நாளொன்றுக்கு முக கவசம் அணியாததாக 100 பேருக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதன்படி, முக கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு தலா 500 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது, மேலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு
Oct 16, 2020, 20:00 IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த 2 மாதங்களில் 6 ஆயிரத்து 500 பேருக்கு அபராதம் விதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில நாளொன்றுக்கு முக கவசம் அணியாததாக 100 பேருக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதன்படி, முக கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு தலா 500 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது, மேலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு 5 ஆயரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் 15 லட்ச ரூபாய் அபராதம் வசூக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.