×

கொரோனா விதிமீறல் – ஈரோட்டில் ஒரே நாளில் 2,152 பேருக்கு அபராதம் விதிப்பு!

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 2 ஆயிரத்து 152 பேருக்கு, அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களுக்கு முக கவசம் அணிந்து செல்லாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் கதிரவன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையொட்டி, சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் ஒருங்கிணைந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஆங்காங்கே திடீர் ஆய்வு
 

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 2 ஆயிரத்து 152 பேருக்கு, அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களுக்கு முக கவசம் அணிந்து செல்லாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் கதிரவன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையொட்டி, சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் ஒருங்கிணைந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஆங்காங்கே திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், மாவட்டம் முழுவதும் ஜவுளி நிறுவனங்கள், உணவகங்கள், கடைகளில், ஆட்சியர் கதிரவன் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு தலா ரூ.500 முதல் 5000 வரை அபராதம் விதித்து வருகிறார். மேலும், சில கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு மட்டும் முகக் கவசம் அணியாமல் வரும் 500 நபர்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஈரோட்டில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் முகக் கவசம் அணியாமல் சென்றவர்கள் என 2 ஆயிரத்து 152 பேருக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.