×

ஓடும் பேருந்தில் பயணியிடம் திருடிய 2 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் பயணியிடம் பணத்தை திருடிய 18 வயது சிறுவன் உள்ளிட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(44). இவர் தனது நண்பர் இசக்கிகுமாருடன் நேற்று ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பன்னீர்செல்வம் பூங்காவிற்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, குணசேகரன் அருகே நின்றுகொண்டிருந்த 2 பேர், பேருந்து கிளம்பியவுடன் குணசேகரன் பாக்கெட்டில் இருந்த 200 ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். குணசேகரன் உடனடியாக கூச்சலிட்டதை
 

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் பயணியிடம் பணத்தை திருடிய 18 வயது சிறுவன் உள்ளிட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(44). இவர் தனது நண்பர் இசக்கிகுமாருடன் நேற்று ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பன்னீர்செல்வம் பூங்காவிற்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.

அப்போது, குணசேகரன் அருகே நின்றுகொண்டிருந்த 2 பேர், பேருந்து கிளம்பியவுடன் குணசேகரன் பாக்கெட்டில் இருந்த 200 ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். குணசேகரன் உடனடியாக கூச்சலிட்டதை கேட்ட அங்கிருந்த பயணிகள் இருவரையும் மடக்கிப்பிடித்து, ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் (32) மற்றும் ஈரோட்டை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.