திருமாவளவன் மீது பாஜக மகளிர் அணி சார்பில் புகார்
ஈரோடு பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஈரோடு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த மனுவில், திருமாவளவனின் பேச்சு ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனதை புண்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருமாவளவன் மற்றும் பெரியார் யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Oct 24, 2020, 17:05 IST
ஈரோடு
பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஈரோடு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், திருமாவளவனின் பேச்சு ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனதை புண்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருமாவளவன் மற்றும் பெரியார் யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.