×

சிவகிரி அருகே பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி!

ஈரோடு ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் சிவகிரி உள்வட்டம் சிவகிரி (ஆ) கிராமம் சிலுவம்பாளையம் பகுதியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ டாக்டர் சி. சரஸ்வதி கலந்துகொண்டு,
 

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் சிவகிரி உள்வட்டம் சிவகிரி (ஆ) கிராமம் சிலுவம்பாளையம் பகுதியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ டாக்டர் சி. சரஸ்வதி கலந்துகொண்டு, 29 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் குடங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கொடுமுடி வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், நில வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும், அதிமுக கொடுமுடி ஒன்றிய செயலாளர் புதூர் கலைமணி, கொடுமுடி ஒன்றியம் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பழனிச்சாமி, பாஜகு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சிவசுப்பிரமணி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.