“தேர்தல் அறிவிப்புக்கு பிறகே, பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும் ” – செங்கோட்டையன்
ஈரோடு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 76.64 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான இலவச மிதிவண்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்த பிறகு, முதலமைச்சர் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசித்து பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும், வரலாற்றிலேயே தமிழகத்தில் மட்டும் தான்
Dec 31, 2020, 23:20 IST
ஈரோடு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 76.64 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான இலவச மிதிவண்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்த பிறகு, முதலமைச்சர் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசித்து பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும், வரலாற்றிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,