×

நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கி 8ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

ஈரோடு அருகே கிணற்றில் நீச்சல் பழகியபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதில் 8ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.ஈரோடு சூரம்பட்டிவலசு இந்திராகாந்தி வீதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகன் நவீன்குமார்(12). அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் நவீன்குமார், நேற்று மதியம் நல்லியம்பாளையத்தில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் தனது நண்பர்களுடன் நீச்சல் பழகிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நவீன் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல்
 

ஈரோடு அருகே கிணற்றில் நீச்சல் பழகியபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதில் 8ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு சூரம்பட்டிவலசு இந்திராகாந்தி வீதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகன் நவீன்குமார்(12). அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் நவீன்குமார், நேற்று மதியம் நல்லியம்பாளையத்தில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் தனது நண்பர்களுடன் நீச்சல் பழகிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக நவீன் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி நவீன்குமாரின் உடலை மீட்டனர். சிறுவனின் உடலை பார்த்து அவனது பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இது குறித்து ஈரோடு தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.