×

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை, பணம் கொள்ளை…

ஈரோடு ஈரோட்டில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு சூளை, காவிரி நகர் 7-வது குறுக்குச் சந்து பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (48). இவர் வீரப்பன்சத்திரம் காட்டாறு தோட்டம் பகுதியில் துணி நூல் பதனிடும் ஆலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக கடந்த புதன்கிழமை செந்தில்குமார், தனது குடும்பத்தினருடன் எழுமாத்தூரில் உள்ள தோட்ட வீட்டிற்கு சென்றுள்ளார். பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று
 

ஈரோடு

ஈரோட்டில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு சூளை, காவிரி நகர் 7-வது குறுக்குச் சந்து பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (48). இவர் வீரப்பன்சத்திரம் காட்டாறு தோட்டம் பகுதியில் துணி நூல் பதனிடும் ஆலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக கடந்த புதன்கிழமை செந்தில்குமார், தனது குடும்பத்தினருடன் எழுமாத்தூரில் உள்ள தோட்ட வீட்டிற்கு சென்றுள்ளார். பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று காலை வீட்டிற்கு வந்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதனுள் இருந்த 50 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வீரப்பன்சத்திரம் போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வுசெய்து வருகின்றனர்.