×

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், 4 பேர் உயிரிழப்பு

ஈரோடு கொடுமுடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சகோதரர்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் தாமோதரன். இவரது சகோதரர் கிருஷ்ணசாமி. இவர்கள் இருவரும் சொந்தமாக டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் கரூருக்கு நூல் வாங்குவதற்காக, அதே பகுதியை சேர்ந்த டெக்ஸ்டைல் உரிமையாளர்கள் ரகுநாத் மற்றும் முருகாமி ஆகியோருடன் காரில் சென்றுள்ளனர். கொடுமுடி அடுத்த ஒத்தக்கடை பள்ளக்காட்டூர் அருகே சென்றபோது
 

ஈரோடு

கொடுமுடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சகோதரர்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் தாமோதரன். இவரது சகோதரர் கிருஷ்ணசாமி. இவர்கள் இருவரும் சொந்தமாக டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் கரூருக்கு நூல் வாங்குவதற்காக, அதே பகுதியை சேர்ந்த டெக்ஸ்டைல் உரிமையாளர்கள் ரகுநாத் மற்றும் முருகாமி ஆகியோருடன் காரில் சென்றுள்ளனர்.

கொடுமுடி அடுத்த ஒத்தக்கடை பள்ளக்காட்டூர் அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கொடுமுடி போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குபதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.