×

ஈரோடு: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

ஈரோட்டில் இன்று நடைபெற்ற மனுநீதி திட்ட முகாமில், 74 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர்வழங்கினார். ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் மனுநீதி திட்ட சிறப்பு முகாம் இன்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. அரசு பள்ளி வளாகத்தில் நடந்த இந்த முகாமில், வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 171 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர், அவற்றை தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். தொடர்ந்து,
 

ஈரோட்டில் இன்று நடைபெற்ற மனுநீதி திட்ட முகாமில், 74 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர்
வழங்கினார்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் மனுநீதி திட்ட சிறப்பு முகாம் இன்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. அரசு பள்ளி வளாகத்தில் நடந்த இந்த முகாமில், வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 171 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர், அவற்றை தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, நுண்ணீர் பசான திட்டம், நகர்புற காய்கறி ஊக்குவிப்பு திட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் 74 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு, கோட்டாட்சியர் சைபுதீன், உள்ளிட்ட ஏராளமனோர் கலந்துகொண்டனர்.