×

ஈரோட்டில் இறந்த அசாம் குழந்தை! இஸ்லாமியர் உதவியுடன் கிருஸ்துவ முறைப்படி உடல் அடக்கம்

ஈரோட்டில் உயிரிழந்த பெண் குழந்தை இஸ்லாமியர் உதவியுடன் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. ஈரோடு மேற்கு மாவட்டம் நம்பியூர் தனியார் மில்லில் வேலை செய்யும் அசாம் மாநிலத்தை சேர்ந்த பவன் என்பவரின் 10 மாத பெண் குழந்தை இன்று அதிகாலை 5 மணி அளவில் உடல்நிலை குறைவால் உயிரிழந்தது. இதையடுத்து பவன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் பவானி முஹம்மதுவிடம் குழந்தையை நல்லடக்கம் செய்ய உதவும்படி கேட்டுக்கொண்டார். அவர் உத்தரவுப்படி, இஸ்லாமியர்கள் நம்பியூரில் உள்ள
 

ஈரோட்டில் உயிரிழந்த பெண் குழந்தை இஸ்லாமியர் உதவியுடன் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

ஈரோடு மேற்கு மாவட்டம் நம்பியூர் தனியார் மில்லில் வேலை செய்யும் அசாம் மாநிலத்தை சேர்ந்த பவன் என்பவரின் 10 மாத பெண் குழந்தை இன்று அதிகாலை 5 மணி அளவில் உடல்நிலை குறைவால் உயிரிழந்தது. இதையடுத்து பவன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் பவானி முஹம்மதுவிடம் குழந்தையை நல்லடக்கம் செய்ய உதவும்படி கேட்டுக்கொண்டார்.

அவர் உத்தரவுப்படி, இஸ்லாமியர்கள் நம்பியூரில் உள்ள தனியார் மில்லில் உடனடியாக நேரில் சென்று அடக்கத்துக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்தனர்.

கிறிஸ்துவ கல்லறைக்குச் சென்று அந்த நிர்வாகிகளை சந்தித்து, பாஸ்டர் சந்தோஷ் காந்தியிடம் கூறி நல்லடக்கம் செய்ய வேண்டினர். அவரும் நல்லடக்கம் செய்ய சம்மதித்தார். அதன்பிறகு நல்லடக்கம் செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஈரோடு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்துவ பாஸ்டர் சந்தோஷ் காந்தி, நம்பியூர் சேர்ந்த சகோதரர்கள் உபைதுல்லா, முஜிபுர் ரகுமான் , சலீம் ஆகியோர் செய்தனர். எல்லோரும் இணைந்து கிறிஸ்துவ முறைப்படி குழந்தையை அடக்கம் செய்தனர்.