×

நத்தம் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கல்லால் தாக்கி படுகொலை!

திண்டுக்கல் நத்தம் அருகே வீடு புகுந்து காதலியை அழைத்துச்செல்ல முன்ற இளைஞரை, பெண்ணின் உறவினர்கள் கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள புதுப்பட்டியை சேர்ந்த சேதுராஜன் மகன் பாரதிராஜா (21). கேட்டரிங் படித்துள்ள இவர், தனியார் தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். பாரதிராஜாவும், மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்த ராசு என்பவரது மகள் பரமேஸ்வரியும் (20) கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். காதல் விவகாரம் பரமேஸ்வரியின் பெற்றோருக்கு தெரிய வந்ததால், அவருக்கு
 

திண்டுக்கல்

நத்தம் அருகே வீடு புகுந்து காதலியை அழைத்துச்செல்ல முன்ற இளைஞரை, பெண்ணின் உறவினர்கள் கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள புதுப்பட்டியை சேர்ந்த சேதுராஜன் மகன் பாரதிராஜா (21). கேட்டரிங் படித்துள்ள இவர், தனியார் தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். பாரதிராஜாவும், மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்த ராசு என்பவரது மகள் பரமேஸ்வரியும் (20) கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

காதல் விவகாரம் பரமேஸ்வரியின் பெற்றோருக்கு தெரிய வந்ததால், அவருக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதை அறிந்த, பாரதிராஜா, பரமேஸ்வரியை அழைத்துச் செல்ல முடிவெடுத்து, நேற்றிரவு நண்பர்களுடன் மூங்கில்பட்டிக்கு சென்றுள்ளார். பின்னர், செல்போன் மூலம் தகவல் அளித்து பரமேஸ்வரியை வரச்செய்த பாரதிராஜா, அவரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது பாரதிராஜாவை, வழிமறித்து பரமேஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதில், ஆத்திரமடைந்த பரமேஸ்வரின் அண்ணன் மலைச்சாமி கல்லை கொண்டு தாக்கியதில், பாரதிராஜா படுகாயமடைந்தார். அவரை நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த நத்தம் போலீசார், விரைந்து சென்று பாராதி ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலியின் அண்ணன் மலைச்சாமி மற்றும் அவரது உறவினர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.