×

குழந்தைகளின் ஆபாச படங்களை, சமூக வலைதளங்களில் பகிர்ந்த இளைஞர் கைது

திண்டுக்கல் திண்டுக்கல்லில் குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த இளைஞரை போலீசார் கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வோரை காண்காணித்து போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை சைபர் கிரைம் போலீசாரின் கண்காணிப்பின் போது, ஒருவர் குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த நபர் திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டியை சேர்ந்த பார்த்தசாரதி (29) என்பது
 

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த இளைஞரை போலீசார் கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வோரை காண்காணித்து போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை சைபர் கிரைம் போலீசாரின் கண்காணிப்பின் போது, ஒருவர் குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த நபர் திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டியை சேர்ந்த பார்த்தசாரதி (29) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து சென்னை சைபர் கிரைம் போலீசார், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி ரவளிபிரியா உத்தரவின் பேரில், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பார்த்தசாரதியிடம விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பார்த்தசாரதியின் செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, தொழில்நுட்ப சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார்த்தசாரதியை கைதுசெய்தனர்.