×

திண்டுக்கல் மலைக்கோட்டையை திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

திண்டுக்கல் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள திண்டுக்கல் மலைக்கோட்டையை தொல்லியல் துறையினர் திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய அவர்கள், மாவட்டத்தின் பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானலும், வழிபாட்டு தலமான பழனியிலும் பொதுமக்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் நிலையில், வரலாற்று சிறப்புமிக்க மலைகோட்டை கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பூட்டப்பட்டிருக்கும் மலைகோட்டை வாயிலை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட
 

திண்டுக்கல்

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள திண்டுக்கல் மலைக்கோட்டையை தொல்லியல் துறையினர் திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய அவர்கள்,

மாவட்டத்தின் பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானலும், வழிபாட்டு தலமான பழனியிலும் பொதுமக்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் நிலையில், வரலாற்று சிறப்புமிக்க மலைகோட்டை கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால், வெளியூரில் இருந்து

வரும் சுற்றுலா பயணிகள் பூட்டப்பட்டிருக்கும் மலைகோட்டை வாயிலை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறையினர் மலைகோட்டையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.