×

புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.திண்டுக்கல் சீலப்பாடி அருகே அன்னைநகரை சேர்ந்தவர் குமரகுருசாமி (24). இவரது மனைவி நிவேதா காமாட்சி (21). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நிவேதா காமாட்சி கடந்த சில மாதங்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வயிற்று வலியை தாங்க முடியாமல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
 

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.திண்டுக்கல் சீலப்பாடி அருகே அன்னைநகரை சேர்ந்தவர் குமரகுருசாமி (24). இவரது மனைவி நிவேதா காமாட்சி (21).

இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நிவேதா காமாட்சி கடந்த சில மாதங்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வயிற்று வலியை தாங்க முடியாமல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் நிவேதா காமாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து ஆர்.டி.ஓ உஷா மேல் விசாரணை நடத்தி வருகின்றார்.