×

மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது!

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி காவல் நிலைய எல்லை பகுதியில் ரெங்கசாமி என்பவர் மணல் திருடி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில், ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது, முத்துப்பாண்டி மற்றும் கணேசன் ஆகிய நபர்கள் மூலமாக ரெங்கசாமி ஒரு டிராக்டரில் மணலை திருடிக்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து, சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்து
 

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி காவல் நிலைய எல்லை பகுதியில் ரெங்கசாமி என்பவர் மணல் திருடி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில், ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது, முத்துப்பாண்டி மற்றும் கணேசன் ஆகிய நபர்கள் மூலமாக ரெங்கசாமி ஒரு டிராக்டரில் மணலை திருடிக்கொண்டு வந்துள்ளார்.

இதையடுத்து, சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்ட ரெங்கசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பளர் பரிந்துரை செய்தார். அதையடுத்து மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, ரெங்கசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.