×

“மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்பு” – பொதுச்செயலாளர் முருகானந்தம்

தனித்து போட்டியிட வாய்ப்புகள் இருந்தாலும், தமிழக மக்களின் நலனுக்காக ஒத்தக்கருத்துடைய கட்சிகளுடன், மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார். திண்டுக்கல் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற கட்சியின் வியூகம்-2021 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். மேலும், நேர்மை என்ற ஒற்றை ஆயுதத்தை வைத்துக்கொண்டு, 50 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மிகப்பெரிய வெற்றியை பெற்று கமலஹாசன் முதல்வர் பதவியேற்கும் சூழ்நிலை
 

தனித்து போட்டியிட வாய்ப்புகள் இருந்தாலும், தமிழக மக்களின் நலனுக்காக ஒத்தக்கருத்துடைய கட்சிகளுடன், மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

திண்டுக்கல் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற கட்சியின் வியூகம்-2021 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். மேலும், நேர்மை என்ற ஒற்றை ஆயுதத்தை வைத்துக்கொண்டு, 50 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மிகப்பெரிய வெற்றியை பெற்று கமலஹாசன் முதல்வர் பதவியேற்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.