×

பழனியில், கேரள கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

திண்டுக்கல் பழனி கோவில் அருகே கேரளாவை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி இடும்பன் மலையில்க்கு செல்லும் பாறையில் அடையாளம் தெரியாத ஆணும், பெண்ணும் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பழனி நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
 

திண்டுக்கல்

பழனி கோவில் அருகே கேரளாவை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி இடும்பன் மலையில்க்கு செல்லும் பாறையில் அடையாளம் தெரியாத ஆணும், பெண்ணும் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பழனி நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், அவர்கள் மேல்சிகிச்சைக்காக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அவர்கள் மயங்கி கிடந்த இடத்தில் பறிமுதல் செய்த ஆதார் கார்டு அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் இடுக்கி மாவட்டம் கல்லாரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (45), பளியக்குடியை சேர்ந்த இன்பராஜ் மனைவி குமாரி (43) என்பது தெரிய வந்தது.

திருமணமான இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில், குடும்பத்தினர் எதிர்ப்பு காரணமாக பழனி வந்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து பழனி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.